வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க வாக்காளர்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்பும் தேர்தல் கமிஷன்..!

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 27-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

“ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு இடையேயான வித்தியாசம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை இலக்காகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி தங்கள் குடும்பத்தினருடன் வாக்களிக்கவும், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்” என்றார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles