பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை – 2 பேர் போக்சோவில் கைது..!

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான், இவர் இன்ஸ்டாகிராமில் பேசி பெண்களை கவர்வதை தொழிலாக பார்த்து வருகிறார். இம்முறை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் நண்பர் ஆனார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் தரவுகளை பெற்றுள்ளார்.

பிறகு, அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அந்த சிறுமியை மிரட்ட துவங்கினார். மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு இர்ஃபான் சிறுமியை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு தெரியாமல் பணத்தை திருடி இர்ஃபானிடம் கொடுத்துள்ளார்.

மார்ச் மாதம் இவ்வாறு இர்ஃபானிடம் பணத்தை கொடுக்கும் போது இர்ஃபான், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இச்செய்தி யாருக்கும் வெளியே தெரியாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார்.

இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை காவல் துறையிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த காவல் துறை அதிகாரி, இர்ஃபான் மற்ற அவனது கல்லூரி மற்றும் பள்ளி பெண்களுடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இர்ஃபான் இதை தனியாளாக செய்யவில்லை இவருக்கு பின் ஒரு கூட்டமே செயல்பட்டு வந்துள்ளது. இர்ஃபானால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் விவரத்தை தெரிந்துக்கொள்ள காவல்துறை முயற்சித்து வருகின்றனர்.

இர்ஃபானும் அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles