யாழ். அராலி பாலத்தில் விபத்து: இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் அராலி பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அராலி கிழக்கை சேர்ந்த லோ. கஜேந்திரன் (வயது 29) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

ஓட்டுமடம் பகுதியில் இருந்து வட்டுக்கோட்டை நோக்கி பயணித்த வாகனம், அராலி பாலத்திற்கு அருகில் வீதியை கடக்க முயன்ற இளைஞனை மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் தலையில் படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles