Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு – சீன பிரதமர்

ஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு – சீன பிரதமர்

இலங்கையை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு “வளரும் தேசம் – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின் முழு ஆதரவையும் அந்நாட்டு பிரதமர் லி கியாங் வெளிப்படுத்தியிருந்தார்.

நேற்று வியாழக்கிழமை பெய்ஜிங்கில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் லி கியாங் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ​​பிரதமர் லி ஜனாதிபதி திசாநாயக்கவை அன்புடன் வரவேற்று, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ஊழல் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சீனாவின் ஆதரவையும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி திசாநாயக்க, தனது கருத்துக்களில், துறவி ஃபாக்சியனின் காலத்தில் இருந்தே சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை எடுத்துரைத்தார்.

வறுமையை ஒழிப்பதற்கும் நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு பிரதமர் லியின் ஆதரவையும் அவர் கோரினார்.

இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் சீன அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார்.

நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், முதலீடுகளை வளர்ப்பது, கலாச்சார பரிமாற்றங்கள், வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular