விபத்தில் சிக்கிய 21 வயது இத்தாலிய இளவரசி

இத்தாலியின் இளவரசி மரியா கரோலினா, ஒரு பயங்கரமான மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பிறகு, தான் “உயிர் பிழைத்திருப்பது அதிர்ஷ்டம்” என்று தெரிவித்துள்ளார்.

காஸ்ட்ரோவின் டியூக் இளவரசர் கார்லோ மற்றும் காஸ்ட்ரோவின் டச்சஸ் இளவரசி கமிலா ஆகியோரின் 21 வயது மகள், இன்ஸ்டாகிராம் பதிவில், நடந்ததைப் பகிர்ந்து கொண்டார்.

விபத்தில் பெரும் காயங்களுக்கு ஆளானதால், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வருவதற்கான பாதையில் இருப்பதாக வெளிப்படுத்தினார்.

“நான் உயிருடன் இருப்பது நம்பமுடியாத அதிர்ஷ்டம். மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது நான் ஒரு சுவரில் மோதி, தீவிர சிகிச்சைப் பிரிவில் மீண்டும் உயிர் பெற்றேன். இதில் இருந்து தப்பியது ஒரு அதிசயம்தான்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

தனது பதிவை முடிக்கும்போது, ​​தன்னை கவனித்துக் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles