இலங்கையில் மீண்டும் காலூன்றும் இந்தியா
இலங்கையின் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்கும் திட்டத்துக்காக, இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படுத்த இந்த திட்டத்துக்காக, 10.4 பில்லியன் ரூபாய் இந்திய நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
