57 மில்லியன் ரூபாய்க்கும் மேல் பெறுமதியுள்ள 5.7 கிலோகிராம் ‘குஷ்’ என்ற போதைப்பொருளுடன் டென்மார்க் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் தாய்லாந்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
25 உணவுப் பொதிகளில், போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
