Tuesday, February 3, 2026
HomeMain NewsAmericaஇந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் ஆரூடம்

இந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் ஆரூடம்

பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்தியா எதிர்காலத்தில் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வாய்ப்பு இருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிரப்பட்ட செய்தியில், “பாகிஸ்தான் உடன் எண்ணெய் ஒப்பந்தங்களில் இணைந்து செயல்பட உள்ளோம். அந்நாட்டில் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்கை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நவீன வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகள் வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் தாக்கமாக, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் பாகிஸ்தானை எண்ணெய் விற்பனையாளராக ஏற்கும் நிலை உருவாகக்கூடும் என ட்ரம்ப் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தகவல் தொடர்ந்து சர்வதேச வர்த்தக சந்தைகளிலும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளிலும் புதிய பரிசீலனைகளை கிளப்பியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular