Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaதேசபந்துவை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாளை மறுதினம் விவாதத்திற்கு

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாளை மறுதினம் விவாதத்திற்கு

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை, தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை நாளை மறுதினம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு, பிற்பகல் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.
அண்மையில் கூடிய நாடாளுமன்ற குழுவில் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவையனைத்தும் நிரூபிக்கப்பட்டன.
இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஏனமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular