மதிய உணவு இடைவேளையின் போது, சக மாணவனால் கொலை செய்யப்பட்ட 15 வயது சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிப்ரவரி 3ஆம் திகதி ஷெஃபீல்டில் (Sheffield) உள்ள ஆல் செயிண்ட்ஸ் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் (All Saints Catholic High School) 15 வயது ஹார்வி வில்கூஸ், கத்தியால் குத்தப்பட்டபோது மரணித்தார்.
ஹார்வியின் கொலையாளியின் வயது காரணமாக அவரது பெயரை வெளியிட முடியாது. இருப்பினும், சில ஊடகங்கள் அவரது அடையாளத்தைப் பாதுகாக்கும் பெயர் தெரியாத உத்தரவை நீக்கக் கோரி விண்ணப்பித்துள்ளன.
அதேவேளை கொல்லப்பட்ட எனது பிள்ளையின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறே, கொலை செய்தவரின் பெயரும் வெளியிடப்பட வேண்டும்.” என கோலா செய்யப்பட்ட சிறுவனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்
