Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு..!

ரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு..!

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர க​ரையோர மார்க்கத்தின் பல ரயில் சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார்.

அதன்படி, 24.08.2025 அன்று இரத்து செய்யப்படவுள்ள ரயில் சேவைகள் பின்வருமாறு

01. காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8319

02. மருதானை ரயில் நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8788

24.08.2025 அன்று திருத்தப்பட்ட தொடக்க நேரங்களுடன் இயக்கப்படும் ரயில்கள்

01. காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8327 சமுத்திரதேவி காலி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.

02. காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் ரயில் எண் 8320, காலை 08.50 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular