இந்தியத் தொலைக்காட்சி நடிகை பிரியா மராத்தே தனது 38 வயதில் காலமானார்.
அவர் நீண்டகாலமாகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 23, 1987 அன்று மும்பையில் பிறந்த பிரியா மராத்தே, மும்பையில் தனது பாடசாலை கல்வியையும் பல்கலைக்கழக கல்வியையும் நிறைவு செய்தார்.
பின்னர் அவர் யா சுகனோயா (Ya Sukhanoya) மற்றும் சார் திவாஸ் சசுச்சே (Char Divas Sasuche) என்ற மராத்தி சின்னதிரைகளில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து பவித்ரா ரிஷ்டா ) என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார்.
