வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி சற்றுமுன்னர் கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (26) நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து சற்றுமுன்னர் அழைத்துவரப்பட்டு கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
