Monday, February 2, 2026
HomeMain News10 லட்சம் ரூபா பெறுமதியான 3000 போதை மாத்திரைகளுடன் யாழில் இளைஞர் கைது!

10 லட்சம் ரூபா பெறுமதியான 3000 போதை மாத்திரைகளுடன் யாழில் இளைஞர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இன்று சனிக்கிமை கைது செய்யப்பட்டார்.

ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞரின் உடைமையில் இருந்து 3000 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular