இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்றதுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்கள் மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
