பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘நினைவு, வலி மற்றும் நம்பிக்கை: 7 ஆண்டுகளின் பின்னர் நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசேட அறிக்கை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

சமூக மற்றும் சமய மையத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ரொஹான் டி சில்வா,

தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகளின் பின்னர் விசாரணைகள் ஒரு சாதகமான திசையை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.

எனவே, விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவங்கள் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை, விசாரணைகள் நிறைவடையும் வரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles