

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று (19) காலை 9.30 மணியவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நாளை (20) வரை நாட்டில் தங்கியிருந்து, இப்பயணத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு, அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளது.
