அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது –
“வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மற்றும் துணை அதிபர் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் உள்ளனர் என்பதை அறிந்து நிம்மதியடைகிறேன்.
அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
