செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் மூன்று எலும்புக்கூடுகள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டன.
அரியாலை – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 244 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று வரை 240 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
