கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகண்டாவில் கொடிய தொற்று நோயான எபோலா பரவியதைத் தொடர்ந்து, மலேசியாவில் இதுவரை எந்த எபோலா பாதிப்பும் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டுபாய், டோஹா மற்றும் சிங்கப்பூர் வழியாக நாட்டிற்குள் நுழையும் பயணிகள் உட்பட, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்கப் போவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவிலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானங்கள் எதுவும் இல்லை என்றும் அமைச்சு தெரிவித்தது
மேலும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட அனைத்து சர்வதேச நுழைவுப் புள்ளிகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாடுகளுக்குப் பயணம் செய்து, அறிகுறிகளைக் காட்டும் நபர்களையும் கண்காணித்து வருவதாகவும்,
சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சுகாதார வசதிகள் வலுப்படுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில், நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதும் அடங்கும் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று, காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) சுமார் 131 பேரைக் கொன்ற எபோலா நோய்ப் பரவலின் “அளவு மற்றும் வேகம்” குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கவலை தெரிவித்தது.
அதிகம் பரவக்கூடிய ரத்தக் கசிவு காய்ச்சலின் அதிகரிப்பை உலக சுகாதார அமைப்பு ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதுடன், இந்த நெருக்கடி குறித்து ஒரு அவசரக் கூட்டத்தையும் நடத்த உள்ளது.
