வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாநிலத்தில் 100 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் , ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இக்குழுக்கள் அங்கு வருகை தரும் ஏனைய சர்வதேச மீட்புக் குழுக்களுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் இதர ஆதரவை வழங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மீட்புக் குழுக்கள் லா குவைரா மற்றும் தலைநகர் கராகஸ் ஆகிய பகுதிகளையே பிரதான மீட்பு மண்டலங்களாகக் கொண்டு கவனம் செலுத்தும் என்றும், வெனிசுலாவின் ஏனைய பகுதிகள் அனைத்தும் அந்த நாட்டு சிவில் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்களால் கையாளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
