வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றைய தினம் (28) மிக சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, பிள்ளையார், முருகன் சமேதரராய் உள் வீதி உலா வந்த நாகபூசணி அம்மன், காலை 08.30 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
நாளை தீர்த்தத் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும். மறுநாள் பூங்காவனத் திருவிழா நடைபெறவுள்ளது.



