HMM (011200.KS) நிறுவனத்தால் இயக்கப்படும் ‘நமு’ என்ற தென்கொரியாவின் சரக்கு கப்பல் ஹேர்மூஸ் நீரிணையில் மே மாதம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சேதங்கள் சரிசெய்யப்பட்டவுடன், ஜூலை மாத நடுப்பகுதியளவில் அப்பகுதியில் இருந்து வெளியேறும் என தென் கொரியாவின் கடல்சார் அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், சரக்குக் கப்பலின் பின்பகுதிக்கு அருகில் அதன் அடிப்பாகம் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சியோல் கூறியதுடன், தனது விசாரணையின் முடிவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், எதிர்ப்புத் தெரிவிக்கவும் ஈரானிய தூதரை அழைத்துள்ளது.
இதேவேளை கப்பல் சேதமடைந்த விவகாரத்தில் தெஹ்ரானுக்கு தொடர்பு இல்லை என தென் கொரியாவிற்கான ஈரானின் தூதர் சயீத் கூசெச்சி மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
