உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்; 30 பேர் பலி

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது வியாழக்கிழமை (02) அதிகாலையில் ரஷ்யா நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் டசின் கணக்கான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

இந்த ஆண்டில் தலைநகர் மீது நடத்தப்பட்ட மிகக் பெரும் தாக்குதலாக இது கூறப்படுவதுடன், இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதுடன் , பலர் காயமடைந்ததுடன், சுமார் 130 கட்டடங்கள் சேதமடைந்தன.

வியாழன் இரவு முழுவதும் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியைத் தொடர் வெடிப்புகள் உலுக்கின. இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தலைநகரின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமுர் டகாசெங்கோ, முன்னதாக 91 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்திருந்தார். இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் முன்னரே எச்சரித்திருந்தார்.

தலைநகரின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில், டினிப்ரோ ஆற்றின் இடது கரையில் உள்ள ஓர் இடத்தில் மீட்புக் குழுவினர் ஐந்து உடல்களை மீட்டனர் எனவும் அதேவேளையில் எட்டு குடியிருப்பாளர்களைப் பற்றிய தகவல் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles