மசூதியுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி!

மலேசியாவின் பாசீர் பூத்தேவில், நான்கு பேருடன் பயணித்த எஸ்யூவி வாகனம் ஒரு மசூதியுடன் மோதியதில், இரண்டு இந்தோனேசியப் பெண்கள் உயிரிழந்தனர். பாசீர் பூத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் அசார் ஹெல்மி முஸ்தோஃபர், காலை சுமார் 6.35 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து இரண்டு நிலையங்களிலிருந்து 13 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் எனவும் கூறினார்.

ஜாலான் செலிசிங் – புக்கிட் மெர்பாவ் சாலையில் உள்ள எஸ்.கே. புக்கிட் ஜாவா 2இற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்ற ஒரு எஸ்யூவி வாகனம் மசூதிக்குள் மோதியிருப்பதைக் கண்டனர்.

அந்த வாகனத்தில் இருந்த ஆறு பேரும் இந்தோனேசியர்கள். பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள், வாகனத்தினுள் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட கடுமையான தலை மற்றும் உடல் காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

சிக்கிக்கொண்டிருந்த இருவரையும் மீட்பதற்காகத் தங்கள் குழு சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் அவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாசீர் பூத்தேவில் உள்ள தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles