மோடியின் வீடியோ தடை செய்யப்பட்டமை குறித்து பேஸ்புக் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு குறித்து ஜென்ஸி தலைமுறையினருக்கு பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ, தவறுதலாக தடை செய்யப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டு பிறகு அது சரி செய்யப்பட்டுவிட்டது என்று மெற்றா செய்தித் தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்டது குறித்து மெற்றா நிறுவத்துக்கு மத்திய அரசு சார்பில் சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இந்த சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வீடியோ, பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த நிலையில், அதனை கிளிக் செய்த போது அது கிடைக்கவில்லை என்று சிறிது நேரம் வந்தது. சற்று நேரத்தில் மீண்டும் வீடியோ வெளியானது. இது குறித்து தகவல் அறிந்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது.

கடந்த வாரம் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த போது, பிரதமர் நரேந்திர மோடி, போராடும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நள்ளிரவில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய அமைச்சரவை இது குறித்து விவாதம் நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“எனக்குத் தெரியும், வினாத்தாள் கசிவு என்பது சாதாரண நிகழ்வு அல்ல, லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது” என்றும் பிரதமர் மோடி அந்த விடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles