ஊடகவியலாளர் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன்  இன்று காலை கனடாவில் காலமானார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராகவும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளராகவும் , யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

கனடாவுக்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி  இன்று வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles