மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்தப் பெருவெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles