விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை, அவரது மனைவி சங்கீதா திரும்பப் பெற்றார். இதனால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

முதல்​வரும், தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் – அவரது மனைவி சங்​கீதா இடையி​லான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதி​மன்​றத்​தில் நீதிபதி சுஜாதா முன்பு இன்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

வழக்கு விசாரணையின்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தெரிவித்தார்.

விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதால், வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். வாபஸ் பெறுவதற்கு முதல்வர் விஜய் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

நீதிபதி சுஜாதா, ‘எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம்’ என அனுமதியளித்து, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

பின்னணி என்ன?

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்க்கு கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். சங்​கீ​தா, கடந்த 2025 டிசம்​பர் 24ஆம் திகதி செங்​கல்​பட்டு மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், தமக்கு விவாகரத்து வழங்​க​வும், நிரந்தர ஜீவ​னாம்​சம் வழங்​க​வும் கோரி​யிருந்​தார்.

இந்த மனு கடந்த பெப்​ர​வரி 26ஆம் திகதி விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்கை செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றி நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

தொடர்ந்​து, கடந்த ஏப்​ரல் 20ஆம் தேதி விசா​ரணைக்கு வந்த இந்த வழக்கு மேலும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15இல் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்​கில் நேரில் ஆஜராவ​திலிருந்து விலக்கு அளித்​து, வீடியோ கொன்​பரன்ஸ் மூலம் ஆஜராக அனு​மதி வழங்க வேண்​டும் என விஜய் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த மனுவை நீதி​மன்​றம் ஏற்​றுக் கொண்டு அனு​மதி வழங்​கியது. இதனையடுத்து இந்த வழக்​கின் வி​சா​ரணை ஓகஸ்ட் 7ஆம்​ திகதிக்குத் தள்​ளிவைக்​கப்​பட்​டது தெரிந்ததே.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles