அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்துதாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.
மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஈரான் – அமெரிக்கா இடையிலான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா அழைப்பு விடுத்துள்ளார்.
