எல்நினோ தாக்கத்தின் காரணமாக தீவிர வெப்ப நிலை பதிவாகியிருந்த நிலையில் இலையுதிர் காலம் குளிராக இருக்கலாம் என பிரித்தானியாவின் மெட் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை கொண்ட இலையுதிர் காலத்திற்கான வாய்ப்புகள், கடந்த காலத்தை விட அதிகமாக உள்ளதாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்துள்ள எல்நினோ நிலமைகள், ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தை ஈரப்பதமான மற்றும் புயல் நிறைந்த இலையுதிர் காலமாக மாற்றும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆகவே குளிரான வானிலைக்கு ஏற்ப தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
