அரண்மனை பாராமரிப்பிற்காக £99.9 மில்லியன் ஒதுக்கீடு – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

பிரித்தானியாவின் அரச அரண்மனைகளைப் பராமரிக்கவும், உத்தியோகபூர்வ கடமைகளுக்கு நிதியளிக்கவும், 2027-28 ஆம் ஆண்டுக்கான £99.9 மில்லியன் இறையாண்மை மானியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைவதைப் பிரதிபலிக்கும் வகையில், அரச குடும்பத்திற்கான நிதியுதவியில் ஏற்ற இறக்கங்களை அனுமதிக்கும் விதமாக, இந்த இறையாண்மை மானிய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக பொது நிதிகள் திருப்பிவிடப்பட வேண்டும் என்று வாதிட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரையன் லீஷ்மேன் Brian Leishman இந்தச் செலவினத்தை எதிர்த்தார்.

அதேநேரம் இழிவுபடுத்தப்பட்ட முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சருக்கு வரி செலுத்துவோரின் பணம் எதுவும் செல்லாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று லிபரல் டெமாக்ரட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாபி டீன் Bobby Dean வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles