(தங்கராசா- சமாதான நீதவான்)
வயது 73
முள்ளிவாய்க்கால், Sri Lanka (பிறந்த இடம்) புதுக்குடியிருப்பு, Sri Lanka
திதி:21/09/2026
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா வேலுப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் – எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா…!
இன்றுடன் பத்து ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
