Colombo (News 1st) ஊடகவியலாளர் ஒருவர் வெல்லக்கூடிய உலகின் மிகவும் முக்கிய விருதாக விளங்குகின்ற புலிட்சர்(Pulitzer) விருதுக்கு இலங்கையின் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கான இறுதிப் பட்டியலில் ASSOCIATED PRESS(AP) புகைப்பட ஊடகவியலாளர் எரங்க ஜயவர்தனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவருடன் இந்த விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றைய புகைப்பட ஊடகவியலாளரும் இலங்கையில் கடந்த வருடம் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த இளைஞர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் புகைப்படங்களை எடுத்தமைக்காக குறித்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
You must be logged in to post a comment.