Colombo (News 1st) இன்று (02) நள்ளிரவு முதல் நீர் கட்டணம் 30 வீதத்தில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் இதனை உறுதிப்படுத்தினார்.
நீர் பாவனையாளர்கள் நீரை பயன்படுத்தும் அளவிற்கு அமைய 30% தொடக்கம் பல பிரிவுகளின் கீழ் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நீர் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.