Tamil Nadu: மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் கச்சத்தீவை மீட்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் குப்புசாமி அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர் படகுகளை மீள கைப்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கச்சத்தீவை மீட்பதே அதற்கான நிரந்தர தீர்வு என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.