Sangathy
News

ஈராக்கில் திருமண வைபவத்தில் பரவிய தீயில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு

Colombo (News 1st) ஈராக்கின் வட பகுதியில் திருமண வைபவமொன்றின் போது ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் புதுமணத் தம்பதியும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஈராக்கின் வடக்கே நினிவே மாகாணத்திலுள்ள அல் ஹம்டானியா மாவட்டத்திலேயே நேற்று(26) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், வாண வேடிக்கைக்காக பட்டாசுகள் பற்றவைக்கப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமண மண்டபத்திலிருந்த தீப்பற்றக்கூடிய படலங்கள், தீ பரவ உதவியிருக்கலாமென அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

Part of USD 200 mn ADB loan spent on cash assistance scheme for paddy farmers

Lincoln

காலி முகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்ல திட்டம்

Lincoln

வன்முறைகள் வெடித்துள்ள மணிப்பூரில் ஊரடங்கு: கண்டவுடன் சுட உத்தரவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy