Sangathy
News

கிளிநொச்சியில் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் கைது

Colombo (News 1st) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுக்குளம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸாரினால் சந்தேகநபர் நேற்று(18) கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உருத்திரபுரம் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் பதிவானது.

கொலை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நீர் விநியோகேம் தொடர்பில் நாளாந்தம் 2000 முறைப்பாடுகள்

John David

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 இல் ஆரம்பம் – கல்வியமைச்சு

Lincoln

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல் – உறவினர்கள் முறைப்பாடு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy