Colombo (News 1st) மட்டக்களப்பு – கல்குடா, கல்மடு பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நேற்று(09) முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்மடு பகுதியைச் சேர்ந்த 53 மற்றும் 56 வயதான இருவர் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என உறவினர்கள் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.