Colombo (News 1st) அரசியல் கட்சிகளுக்கு பணம் கிடைக்கும் விதம், அவர்களின் பின்புலத்தில் உள்ள தரப்பினர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று (16) தெரிவித்தார்.
ஜனாதிபதியினால், பிரியசாத் டெப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு ஊடாக, அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான யோசனையை முன்வைக்க தயாராவதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
You must be logged in to post a comment.