கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் தொட்டலங்க பழைய சந்தைக்கு அருகில் களனி ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர் 45 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.