நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததில் இருந்து சமந்தாவை பற்றியும் அதிகம் பேசப்படுகிறது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு சிங்கிளாக இருந்து வந்த நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 2022ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதி ரொம்ப நல்ல நாள், அதை மிஸ் பண்ணவே கூடாது என அவசர, அவசரமாக அன்றே நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துவிட்டார்கள்.
நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானதில் இருந்து சமந்தாவை பற்றி அதிகம் பேசப்படுகிறது. இந்த சமந்தா என்ன செய்கிறார், அவர் கணவர் யார், அது என்ன காதல் கதை என சினிமா ரசிகர்கள் கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சமந்தா நடிகை சமந்தா இல்லை. சோபிதா துலிபாலாவின் அன்புத் தங்கை சமந்தா துலிபாலா.
சமந்தா துலிபாலா ஒரு டாக்டர். டெல்லியை சேர்ந்த சாஹில் குப்தா என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டிலும் அந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே கடந்த ஆண்டு சாஹில் குப்தாவின் மனைவி ஆனார் சமந்தா துலிபாலா.
இந்நிலையில் தன் அக்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்தினார் சமந்தா துலிபாலா. அதில் இருந்து சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் அடிக்கடி செல்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
இப்படி சோபிதாவின் தங்கை சமந்தா பற்றி அதிகம் பேசப்படும் நேரத்தில் நடிகை சமந்தாவின் ரசிகர்களோ பெயர் ஒற்றுமை காரணமாக எரிச்சலில் இருக்கிறார்கள். எங்க சம்முவை நிம்மதியாவே இருக்கவிட மாட்டாங்க போலயே. இங்கேயும் ஒரு சமந்தாவா என நடிகை சமந்தாவின் ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
உங்களுக்கே இப்படி இருந்தால், மாஜி மனைவியின் பெயர் தான் மச்சினியின் பெயர் என்பதால் நாக சைதன்யாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அவர் நிலைமையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கப்பா என்கிறார்கள் நாகர்ஜுனா குடும்பத்து ரசிகர்கள்.
நல்ல நாளை தவறவிடக் கூடாது என நிச்சயதார்த்தத்தை திடீரென்று நடத்தியதாக தெரிவித்தார் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா. ஆனால் பிரபல ஜோதிடரான வேணுசாமியோ நாக சைதன்யா, சோபிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நேம் நல்ல நேரம் இல்லை என்கிறார். மேலும் இந்த ஜோடி 2027ம் ஆண்டு பிரிந்துவிடும் என கூறியிருக்கிறார். அந்த பிரிவுக்கு காரணமாக இருக்கப் போவது ஒரு பெண் என வேணுசாமி கணித்துள்ளார்.
அந்த வீடியோவில் வேணுசாமி கூறியிருப்பதாவது,
“நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நேரம் நல்ல நேரம் இல்லை. இருவரின் ஜாதகமும் ஒத்துப் போகவில்லை. நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் 2027ம் ஆண்டு பிரிந்துவிடுவார்கள். அந்த பிரிவுக்கு காரணமாக ஒரு பெண் இருப்பார்.
நாக சைதன்யா-சமந்தா ஜோடிக்கு 100க்கு 50 மதிப்பெண் கொடுப்பேன். நாக சைதன்யா-சோபிதா ஜோடிக்கு 100க்கு 10 மதிப்பெண் தான் கொடுப்பேன்.
கெரியரை பொறுத்தவரை சமந்தாவின் ஜாதகம் 100 சதவீதம் நன்றாக இருக்கிறது. ஆனால் சோபிதாவின் கெரியருக்கு 20 சதவீத வாய்ப்பு தான் இருக்கிறது. சோபிதா துலிபாலாவின் ஜாதகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இருந்தாலும் என் கணிப்பு பொய்யாகி அவர்கள் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்” என்றார்.
காதலிப்பவர்கள் ஜாதகம் பார்ப்பது இல்லை. அப்படியே ஜாதகம் பார்த்து செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் கடைசி வரை நிலைப்பதுவும் இல்லை. அதனால் ஜாதகத்தை நம்பாமல் மனிதர்களை நம்புவோம். நாக சைதன்யா, சோபிதாவின் திருமணம் கடைசி வரை நிலைக்கும். அவர்களின் காதல் உறுதியாக இருந்தால் போதும். எந்த பெண்ணாலும் அவர்களின் திருமண உறவை பிரிக்க முடியாது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஆகஸ்ட் 8ம் திகதி ரொம்ப நல்ல நாள் என்பதால் தான் திடீரென்று நிச்சயதார்த்தத்தை நடத்தியதாக தெரிவித்தார் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.