இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், பயிற்றுவிப்பாளருமான கிரஹம் தோர்பே (54 வயது) கடந்த திகதி மரணமடைந்த நிலையில் அவர் தனது உயிரை தானாகவே மாய்த்துக் கொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கிரஹம் தோர்பே கடந்த இரண்டு வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, அவர் இதற்கு முன்னரும் உயிரை மாய்ப்பதற்கான முயற்சிகளில் ஒரு தடவை ஈடுபட்டதாக கூறப்படுகிறது.