ஆடி அமாவாசை தினத்தை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்கே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும், ஆடி அமாவாசை புனித நாளை அரச விடுமுறையாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான விடயம் சமய விவகாரங்களை கையாளும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும், அதன் பின்னர் அந்தக் குழுவின் முடிவுகள் அறிவிக்கப்படும் – என்றும் கூறினார்.
