Saturday, September 21, 2024
Homeகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை..!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை..!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் OMP வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்று (18) காலை யாழ். பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம், சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த விசாரணைகளானது 16 ஆம் திகதி உடுவில் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில், நேற்று (17) பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெற்றது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments