இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் 5 விமானப் படையினர் உயிரிழந்தனர்.
ஜோர்ஹாட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோதே விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான AN-32 விமானம் இந்திய விமானப்படையின் 43 வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒன்றாகும்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இது குறித்து கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
