யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் முருகன் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவநாயகி அற்புதராஜா அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அற்புதராஜா(Asbestos Cement Industries) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுதர்சன், காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, செல்வநாயகி, தியாகராஜா, நடராஜா, தங்கராஜா ஆகியோரின் அன்பு பாசமிகு சகோதரியும்,
ஹரிணி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-08-2024 புதன்கிழமை இன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்