வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள், அரச மருந்தகங்களில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய பதாகைகள் மக்களுக்கு சேவை நடைபெறும் பகுதிகளில் கண்ணில் தென்படுமாறு காட்சிப் படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுனர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மாகாண சுகாதார அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறித்த பதாகையில் பின்வருமாறு காட்சிப்படுத்தும்படி அதாவது நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாயர்களும் ,வைத்தியர்களும் ,அலுவலர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்,தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஆகியன அடங்க வேண்டும் எனவும்
குறிப்பாக மாகாண சுகாதாரசேவைப் பணிப்பாளர், மாவட்ட சுகாதாரசேவைப் பணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் பதாகையில் அடங்க வேணும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.