யாழ்ப்பாணத்தின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் மழையுடன் கூடிய சுழல்காற்று பல்வேறு பகுதிகளையும் தாக்கியுள்ளது. இதனால் சில இடங்களில் மக்களின் வீடுகளுக்கு சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக வடமாகாணத்தில் அதிகளவான வெப்பமான காலநிலை காணப்பட்டபோதும் நேற்றிலிருந்து சாதாரணமான மழை காணப்பட்ட நிலையில் இன்று மழையுடன் சுழல்காற்றும் வீசுகின்றமை குறிப்பிடத்தக்கது.