Sunday, September 22, 2024
Homeஇனி தனுஷே கேட்டாலும் முடியாதாம் : செல்வராகவன் எடுத்த அதிரடி முடிவு...!

இனி தனுஷே கேட்டாலும் முடியாதாம் : செல்வராகவன் எடுத்த அதிரடி முடிவு…!

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தவர் தான் செல்வராகவன்.வித்யாசமான படைப்புகளின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவானார்.

மேலும் அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவர் திரைப்படம் வெளியான சமயத்தில் வெற்றிபெறவில்லை என்றாலும் இன்று அனைவராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கின்றது. அந்த வகையில் எப்படி கமலின் சில திரைப்படங்கள் வெளியான சமயத்தில் சரியான வரவேற்பை பெறாமல் காலம் கடந்து கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றதோ அதைப்போல தான் செல்வராகவனின் படங்களும் உள்ளன.

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வெளியான சமயத்தில் வணீக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் அப்படங்களின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் தற்போது காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராகவன் கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அதன் பிறகு முழு நேர நடிகராகவே ஆகிவிட்டார் செல்வராகவன். பீஸ்ட், பகாசுரன் என தொடர்ந்து பல படங்களில் செல்வராகவன் நடித்து வந்தார். சமீபத்தில் கூட தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இவ்வாறு செல்வராகவன் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் இயக்குனர் செல்வராகவனின் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தனர்.

மீண்டும் செல்வராகவன் எப்போது படங்களை இயக்கப்போகின்றார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தன்னை இயக்குனராக ரசிக்கும் ரசிகர்களுக்காக செல்வராகவன் தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி தற்போது மீண்டும் படங்களை இயக்கும் பணிகளை செல்வராகவன் துவங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் இனி படங்களில் நடிப்பதையும் செல்வராகவன் நிறுத்தப்போகின்றாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இனி தான் படங்களில் நடிக்கப்போவதில்லை என செல்வராகவன் கூறி வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.இருப்பினும் செல்வராகவன் தற்போது புதுப்பேட்டை 2 , ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற கதைகளை தயார் செய்து வருகிறாராம்.

எனவே தனுஷே தற்போது வந்து செல்வராகவனை நடிக்க அழைத்தாலும் அவர் நடிக்கும் முடிவில் இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். இந்த தகவல் செல்வராகவன் என்ற இயக்குனருக்கு ரசிகர்களாக இருக்கும் பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments